பெரியாழ்வார் திருமொழி 4-6-8ல் “நம்பி பிம்பியென்று” என்ற சொல் யாரைக் குறிப்பிட்டு ஆழ்வார் பாடியுள்ளார்? நம்பி என்பது இங்கே பெருமாளின் திருநாமத்தைக் குறிக்கிறதா? அடியேன்

இங்கே, நம்பி என்பது பெருமாளைக் குறிப்பதில்லை.
குறிப்புகள்:
நம்பி என்ற சொல்லுக்குப் பரிபூர்ணன் என்றப் பொருளும், திருக்குடந்தை என்பெருமானுக்கும் இந்தப் பெயர் என்பது ப்ரசித்தம்.
நம்பி என்று ஒருவர் இருந்தார், குறைவற்றவராக இருந்தார் அவருடைய பெயரை என் பிள்ளைக்கிட்டால், இவனும் குறைவற்றவனாக என்று நினைத்து அவனுடைய பெயரை இவனுக்கிட்டால் அது சரியில்லை என்பது ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்கிறது என்று தெரிகிறது.
பிம்பி என்ற சொல் நம்பிக்கு எதிர்தட்டுச் சொல் தானே தவிர அதற்கு அர்த்தமில்லை. பிம்பி என்பதற்கு எப்படி அர்த்தமில்லையோ அதேப் போல் நம்பிக்கும் அர்த்தமில்லை, அதாவது யாரோ நம்பி என்ற மனிதனின் பெயரை என பிள்ளைக்கு வைத்தால் அதற்கு அர்த்தமில்லை,அது ப்ரயோஜனப்படாது என்பது தான் ஆழ்வாரின் திருவுள்ளமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top