அடியேனுக்கு ஶ்ராத்த விஷயமாக ஒரு சந்தேகம், தெளிவுப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். 4-5 சகோதரர்கள் இருந்து, மூத்தவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அல்லது பிற காரணங்களால் ஶ்ரார்த்தம் செய்ய முடியவில்லையென்றால், மற்ற சகோதரர்களில் யாரேனும் ஒருவர் அதைச் செய்ய முடியுமா?

அனைவரும் சேர்ந்து ஶ்ராத்தம் பண்ணுகின்றார்களா அல்லது தனித்தனியாக பண்ணுகின்றார்களா என்பது முதல் விஷயம்.
சேர்ந்து செய்கின்றர்கள் என்றால், மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி அவருக்கு அடுத்திருப்பவர் பண்ணுவதே வழக்கம்.
தனித்தனியாக செய்பவர்களாக இருந்தால், அவரவர் செய்யும் ஶ்ராத்தத்தை அவரவர் பண்ண வேண்டும். மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி வேறு யாராவது ஒருவர் தான் தனியாக பண்ண வேண்டும் என்று இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top