ஶ்ரார்த்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில் a. ப்ராமணர்களுக்கு அன்னம் சாதிப்பது பாவத்தில் சேர்த்தி ஆகுமா? b. கர்த்தா, கர்த்தாவினுடைய அம்மா மற்றும் ப்ராதாக்கள் அன்னம் ஸ்வீகரிக்கலாமா? c. கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ அம்மா அப்பாவினுடைய ஶ்ரார்த்த உணவை ஸ்வீகரிக்கலாமா?

ஶ்ராத்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில், ப்ராமணார்த்தகாரர்களுக்கு அன்னம் தான் சாதிக்கவேண்டும். ஏன்னென்றால் அன்று அன்னத்தில் தான் ஹோமம் பண்ண வேண்டும். ஹுத சேஷம் என்பதெல்லாம் அதில் உண்டு. அதனால் அன்னம் தான் அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்.
ஆனால் கர்த்தாவானவர் அன்றைய தினம் ஏகாதசி என்பதினால், அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.
கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ, அம்மா அப்பாவினுடைய ஶ்ராத்த உணவை தாராளமாக ஸ்வீகரிக்கலாம். ஆனால் ஏகாதசியாக இருந்தால் அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.
குறிப்புகள்
ஏகாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் அன்று அன்னத்தை கட்டாயமாக ஸ்வீகரிக்கக்கூடாது. பித்ரு சேஷம் இல்லாமல் வேறு எதுவும் தளிகை செய்து ஸ்வீகரிக்கக்கூடாது. அதனால் உபவாஸம் இருக்கலாம் அல்லது பக்ஷணங்கள் , காய்கறிகள் இவை மட்டுமே ஸ்வீகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top