ஜீவ இம்சை கூடாது என்கிற பக்ஷத்தில் பட்டு புடவை அணிந்து கொள்வது சரியா? பட்டு வஸ்த்ரம் மடி என்றும் சொல்கிறார்கள். இந்த தலைமுறையினர் கேட்கும் இக்கேள்விக்கு அடியேனால் பதில் கூற முடியவில்லை. விளக்கம் தர ப்ரார்த்திக்கிறேன்.

இதற்கு க்ரய சுத்தி என்று பெயர். நாம் கடைகளில் பணத்தை கொடுத்து பட்டு வஸ்த்ரம் வாங்குவதனால், அந்தத் தோஷம் நமக்கு வராது. ஆகையால் பட்டு வாங்கலாம், வாங்கி பெருமாளுக்கு, பாகவதர்களுக்கு ஸமர்பிக்கலாம்.
இதில் தீவிரமாக அடுத்தவரைக் கொண்டு ஜீவஹிம்சை செய்வது தவறு என்று நினைத்தால் பட்டு வஸ்திரங்களைத் தவிர்க்கலாம்.
குறிப்புகள்
பணம் கொடுத்து பட்டு வாங்குபவர்களுக்கு தோஷம் ஏற்படாது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தோஷத்திற்கு, வ்யாபார முறையில் பரிஹாரம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top