ஆடி மற்றும் தை அமாவாஸை நாட்களில் மேலும் ஆடி, தை, சித்திரை மற்றும் துலா மாச பிறப்பு நாட்களில் என்ன தளிகை செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.

அமாவாஸைக்கு பயத்தம் பருப்பு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு , பாகற்காய், வெள்ளரிக்காய் ,அகத்திக்கீரை இவை எல்லாம் உபயோகிப்பது விசேஷம். ஶ்ராத்தத்திற்கு என்னவெல்லாம் விசேஷமோ அவையெல்லாம் இதற்கும் விசேஷம்.
குறிப்புகள்
தை அமாவாஸை அன்று வைத்ய வீரராகவப் பெருமாளுடைய திருவவதார தினம். அதனால் அன்றைய தினம் சிலர் விசேஷ தளிகை செய்து கொண்டாடுவதும் உண்டு. மற்ற தளிகை எப்பவும் போல் குழம்பு, சாற்றமுது என்று செய்து கொள்ளலாம்.
தர்ப்பண தினத்தில் கத்திரிக்காய், பீன்ஸ் போன்றவை சேர்க்கக்கூடாது. மாசப்பிறப்பு அன்று துவரம்பருப்பு சேர்த்துக்கொண்டு கல்யாண ரீதியில் விசேஷமாக தளிகைச் செய்வதென்பது ஒரு வழக்கம். மற்றொரு வழக்கமும் இருக்கின்றது, அதாவது தர்ப்பணம் செய்யும் நாள் என்பதினால் பயத்தம்பருப்பு சேர்த்து பண்ணவதும் சம்ப்ரதாயத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top