வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் அவசியம் பண்ணிக்கொள்ளலாம். எங்கு இருந்தாலும் பரந்யாஸம் பண்ணிக்கொண்டால் காப்பாற்றப்பட்டு விடுவோம், அதனால் கட்டாயம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அங்கு வாழ்வது உத்தமகல்பம் என்று சொல்ல முடியாது. ஆனால் அங்குதான் நமக்கு வாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் அங்கு தொடர்ந்து ஆழ்வார்கள், ஆசார்யர்கள் சொல்லிக் கொடுத்தபடி, எம்பெருமானார் காண்பித்துக் கொடுத்த வழிகளின்படி முடிந்த அளவிற்கு அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வாழ வேண்டும். எங்கிருந்தாலும் எல்லாரும் பரந்யாஸம் கட்டாயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.