ஸ்நானம் செய்து மடி வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பின்பு கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும் என்பது பொது விதி. இது ஸ்த்ரீகளுக்கும் பொருதும்.
ஸ்த்ரீகளுக்கு திருமணமென்பது உபநயனஸ்தானத்தில் ஆகின்றபடியால், திருமணத்திற்க்குப் பின்பு அவர்கள் அவசியம் செய்தல் வேண்டும்.
புருஷர்கள் போல் உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்ய வேண்டுமென்கிற அவசியம் இல்லை. செய்யும் வழக்கமும் இல்லை. ஸ்த்ரீகள் ஆசமனம் செய்யும் பொழுது அச்யுதா, அனந்தா, கோவிந்தா என்று பிரணவம் இல்லாமலும், நம: சப்தம் இல்லாமலும் திருநாமங்களை மட்டும் உச்சரித்து மூன்று தடவை தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும்.