ஸ்த்ரீகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளும் பொழுது பெருமாளுடைய த்வாதச நாமங்கள் மற்றும் பிராட்டியினுடைய துவாதச நாமங்கள் அவசியம் சொல்ல வேண்டும். அடியேனுடைய ஆசார்யன் சொல்லிக் கொடுத்தது என்னவென்றால் எந்த இடத்தில் திருமண் காப்பு ஸ்ரீ சூர்ணம் தரிக்கின்றோமோ அந்த இடத்தில் கை கூப்பிக் கொண்டு அந்த திருநாமத்தைச் சொல்ல வேண்டும். உதாஹரணத்திற்கு நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் பொழுது இந்த இடத்தில் கையைக் கூப்பிக் கொண்டு கேசவாய நம: , ஸ்ரீயை நம: என்று சொல்லவேண்டும்.
த்வாதச நாமங்கள் எப்படி புருஷர்கள் தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் ஸ்த்ரீகளும் அதே ஸ்தானங்களில் இட்டுக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்றது, ஆனால் அது வழக்கத்தில் இல்லை.
ஆகையால் எந்த இடத்தில் புருஷர்கள் திருமண் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்கிறாகளோ, பொதுவாக ஸ்திரீகளால் அவ்விடங்களில்(உதாஹரணமாக, வலது கை, வலது தோளில் இடது கை இடது தோளில் மார்பில் கழுத்தில் போன்ற இடங்களில்) தரித்துக் கொள்வது என்பது சாத்தியமாக இருப்பதில்லை ஆகையால் அவ்விடங்களில் கையைக் கூப்பிக் கொண்டு எம்பெருமான் பிராட்டியின் அந்தந்த திருநாமங்களை அவசியம் சொல்ல வேண்டும்.