நாக தோஷம் இருந்தால், குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் அவசியம் கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் சொல்லலாம். எந்தவிதமான சர்ப்ப தோஷம் இருந்தாலும் கருடபஞ்சமி அன்று கருடதண்டகம் சொன்னால் தோஷம் நீங்கிவிடும். ப்ரபந்நர்களுக்கு எந்த தேவதையிடமிருந்தும் எவ்வித ஆபத்தும் வரும் என்கின்ற பயம் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எம்பெருமான் கட்டாயம் காப்பாற்றுவார். எம்பெருமானுடைய அடியார் ஆன கருடனுடைய ஸ்தோத்திரங்களைச் சொன்னால் எப்பேர்பட்ட நாகதோஷமும் நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் போட்டி, பொறாமை போன்றவைகள் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தே உபயுக்தமாக இருக்கும்.
ஏனென்றால் கருடபஞ்சாஶத்தினுடைய பலஶ்ருதியில் வ்யாதி4தை3வ ஆதி4பீடா3 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஆதி என்பது மனோவ்யாதி. மனோவ்யாதி தான் இந்த மாதிரி பொறாமை போட்டி போன்ற எண்ணங்களாகும். அதனால் அவை எல்லாம் நீங்குவதற்கும் கருடபஞ்சாஶத்தை சேவிப்பதே உசிதம்.