அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாது, ஆனால் தேஶிகன் ஸ்லோகங்கள், ஸஹஸ்ரநாமம், பாதுகாஸஹஸ்ரம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்வேன். அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சம்யுக்தங்களின் பயன்பாடு தெரியாததால் நிறைய தவறுகள் இருக்கும்.அடியேனுக்கு அறுபது வயதுக்கு மேல், ஸம்ஸ்க்ருதம் படிக்க முடியாது. தினப்படி வாழ்க்கையில் பலவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போய்விடுகின்றேன். ஆனால் அடியேனுக்கு அனைத்து ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களையும் சேவிக்க ஆசை. நான் தவறாக உச்சரித்தால் எனக்கு க்ஷமாபணம் உண்டா?

கூடியவரை தவறு இல்லாமல் சொல்வது விசேஷம்.
கொஞ்சம் தவறிருந்தால் அதில் ஒன்றும் தோஷமில்லை. ஆனால் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதுவே வேதத்திற்கும் , ஸ்தோத்ரத்திற்கும் இருக்கும் வித்தியாசம். வேதத்தில் ஸ்வரம் தப்பினாலோ, அக்ஷரங்கள் தப்பினாலோ, தோஷமாகும். இதில் அப்படிக் கிடையாது. குறிப்பாக ஸஹஸ்ரநாமத்தின் கடைசியில்
“யத3க்ஷர பத3ப்4ரஷ்டம் மாத்ரஹீனம் து யத்3ப4வேத்
தத் சர்வம் க்ஷம்யதாம் தே3வா நாராயண நமோஸ்துதே”
என்று சொல்லி பெருமாளிடம் நமஸ்காரம் பண்ணி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க ப்ரார்த்திப்பதற்கு இருக்கின்றது. இப்படிச் சில ஸ்லோகங்களில் இருக்கும். அப்படி இல்லாவிட்டால்கூட நாம் பக்தியுடன் சொல்லும்பொழுது ஒரு குழந்தையினுடைய மழலைச்சொல்லை எப்படிப் பெரியவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதேபோலே பெருமாளும் ஏற்றுக்கொள்வார். அதற்காக அப்படியே சொல்லாமல் ஓரளவு திருத்திக்கொள்ள ப்ரயத்தனம் பண்ண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top