கூடியவரை தவறு இல்லாமல் சொல்வது விசேஷம்.
கொஞ்சம் தவறிருந்தால் அதில் ஒன்றும் தோஷமில்லை. ஆனால் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதுவே வேதத்திற்கும் , ஸ்தோத்ரத்திற்கும் இருக்கும் வித்தியாசம். வேதத்தில் ஸ்வரம் தப்பினாலோ, அக்ஷரங்கள் தப்பினாலோ, தோஷமாகும். இதில் அப்படிக் கிடையாது. குறிப்பாக ஸஹஸ்ரநாமத்தின் கடைசியில்
“யத3க்ஷர பத3ப்4ரஷ்டம் மாத்ரஹீனம் து யத்3ப4வேத்
தத் சர்வம் க்ஷம்யதாம் தே3வா நாராயண நமோஸ்துதே”
என்று சொல்லி பெருமாளிடம் நமஸ்காரம் பண்ணி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க ப்ரார்த்திப்பதற்கு இருக்கின்றது. இப்படிச் சில ஸ்லோகங்களில் இருக்கும். அப்படி இல்லாவிட்டால்கூட நாம் பக்தியுடன் சொல்லும்பொழுது ஒரு குழந்தையினுடைய மழலைச்சொல்லை எப்படிப் பெரியவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதேபோலே பெருமாளும் ஏற்றுக்கொள்வார். அதற்காக அப்படியே சொல்லாமல் ஓரளவு திருத்திக்கொள்ள ப்ரயத்தனம் பண்ண வேண்டும்.