எங்கள் வீட்டில் 3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் உள்ளது. எனது பர்த்தா நித்யமும் பால் மற்றும் ஜலம் கொண்டு திருவாராதனம் செய்து வருகின்றார். கடந்த சுதர்சனத்தில் 1 அல்லது 4 அல்லது அதற்கு மேல் சாளக்கிராமம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 3 சாளக்கிராமங்களுக்குத் திருவாராதனம் செய்யலாமா தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் இருந்தால் அவற்றில் ஒரு சாளக்கிராம மூர்த்தியை ப்ரதானமாக வைத்துக்கொண்டு , மற்றவர்களை அப்ரதானமாக பக்கத்தில் ஏளப்பண்ணிக்கொள்ள வேண்டும். ப்ரதானமானவருக்கு நாம் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம். பெருமாள் சங்கல்பத்தில் நான்கு சாளக்கிரமங்கள் ஏளிய பின் அனைவருக்கும் விசேஷமான திருவாராதனம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top