ஶாஸ்த்ரத்தைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுது சுந்தரகாண்டம் முதலானவற்றை ஸ்த்ரீகள் பாராயணம் பண்ணக்கூடாது. ஆனால் நாம் எத்தனையோ விஷயங்களில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி கொண்டுதான் இருக்கின்றோம். அதனால் அந்தரீதியில் சிலர் இதையும் தளர்த்திக் கொள்கிறார்கள்.
ஶாஸ்த்ரப்படி பார்த்தால் சுந்தரகாண்டத்தில் கதைகள் இருக்கின்றது அவற்றை நாம் படிக்கலாம். காலக்ஷேபமாக கேட்கலாம். மற்றவரைப் படிக்கச்சொல்லி கேட்கலாம். ஆனால் மூல க்ரந்த பாராயணம் என்பதைதான் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.