ஓய்வுக்குப் பிறகு பகவத் கீதை, பாகவதம், சுந்தரகாண்டம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் தினமும் ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வேன். முந்தைய சுதர்சனத்தில், ஸ்த்ரீகள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கக் கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது . நான் 1000 நாமங்களை பகவத் ப்ரீதியினால் சங்கல்பம் மற்றும் பலஸ்ருதி இல்லாமல் பாராயணம் செய்கிறேன். பகவத் ப்ரீதியினால் பெண்கள் பகவத் கீதை, சுந்தரகாண்டம் மற்றும் பாகவதம் ஆகியவற்றைப் படிக்கலாமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

ஶாஸ்த்ரத்தைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அப்பொழுது சுந்தரகாண்டம் முதலானவற்றை ஸ்த்ரீகள் பாராயணம் பண்ணக்கூடாது. ஆனால் நாம் எத்தனையோ விஷயங்களில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி கொண்டுதான் இருக்கின்றோம். அதனால் அந்தரீதியில் சிலர் இதையும் தளர்த்திக் கொள்கிறார்கள்.
ஶாஸ்த்ரப்படி பார்த்தால் சுந்தரகாண்டத்தில் கதைகள் இருக்கின்றது அவற்றை நாம் படிக்கலாம். காலக்ஷேபமாக கேட்கலாம். மற்றவரைப் படிக்கச்சொல்லி கேட்கலாம். ஆனால் மூல க்ரந்த பாராயணம் என்பதைதான் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top