கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்று கொண்டு இருந்தால் சேவிப்பது சரியா?

கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்றுகொண்டு இருந்தால் அவாளே நகர்ந்துக்கொள்ளணும்,முடிந்தால் நாம் அவர்களைத்தாண்டி நகர்ந்துசென்று சேவிக்கலாம். அது முடியவில்லையென்றால் நாம் கோஷ்டியைச் சேவிப்பதாக நினைத்துக்கொண்டு சேவிக்க வேண்டும். அதில் தவறில்லை.
நாம் சேவிக்கும் பொழுது அவர்கள் வேறு கார்யமாக செல்வார்கள், இல்லை கைங்கர்யபரர்களாக இருப்பார்கள், சில நேரங்களில் இதையெல்லாம் ரொம்ப தீவிரமாக பார்க்கவும் முடியாது. ஆகையால் நமக்கு கோஷ்டியைச் சேவிப்பது மட்டும் தான் லட்சியம் என்பதை நினைத்துக்கொண்டு சேவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top