அத்யயனம் மற்றும் அனத்யயன காலங்களைப் பற்றி விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

வேதாத்யயனம் செய்ய கேட்டுள்ளீர் எனக்கொண்டு இப்பதிலை பகிர்கின்றேன். தர்மஶாஸ்த்ரத்தில் இதை விரிவாக சொல்லியுள்ளனர்.
அத்யயன காலம் என்றால் – படிக்கவேண்டிய காலம்
அனத்யயன காலம் பொதுவாக அஷ்டமி, சதுர்தசி, அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை. இந்த நான்கு தினங்களும் அனத்யயன தினம்.இந்த நாட்களில் வேதாத்யயனம் பண்ணக்கூடாது, சந்தை சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
திவ்ய ப்ரபந்தம்/ஸ்தோத்ர பாடங்கள் பொருத்தவரை, அஷ்டமி, சதுர்தசியில் சொல்வதுண்டு. அமாவாஸை/பௌர்ணமி மற்றும் ப்ரதமை இந்த இரண்டு நாட்களில் சந்தை சொல்லக்கூடாதென்று வைத்துள்ளனர். ஆனால் இந்நாட்களில் பாராயணங்கள் செய்யலாம்.
அனத்யயன காலம் என்று வேறு நிறைய விசேஷமாகவும் இருக்கின்றது.
வேத அனத்யயன காலத்தில் நிறைய கணக்குண்டு. அதாவது எத்தனை நாழிகை அஷ்டமி இருந்தாலோ, பௌர்ணமி இருந்தாலோ அது எப்படி என்பதாக. நேரமிருப்பின் பின் நாட்களில் விஸ்தாரமாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top