ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதர தேவதாந்திரங்களை ஏன் சேவிக்க கூடாது. ஏன் அவர்களுடைய கோவில்களுக்குச் செல்லக்கூடாது? சென்றால் தோஷம் ஏற்படுமா?

எம்பெருமான் என்பவன் தேவாதிதேவன், எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன். அப்படி உயர்ந்த எம்பெருமானைச் சேவிக்கும்பொது மற்ற தேவதாந்திரங்களைச் சேவித்தால் இருவரையும் சமமாகபாவித்ததைப் போல் ஆகிவிடும். அப்படிச் செய்தல் கூடாது.
எம்பெருமான் ரொம்ப ரொம்ப உயர்ந்தவன் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது. மேலும் எம்பெருமானுக்குச் சமமாக மற்ற தேவர்களை நினைத்தால் அது மகா பெரியபாபம். அது அந்தத் தேவர்களுக்கே பிடிக்காது, அவர்களும் அப்படி நினைக்கச் சொல்லவில்லை.
எங்களைச் சேவித்தால் என்ன பலன் என்று தான் சொல்லுகிறார்கள், அவரைவிடப் பெரியவர் அவருக்குச் சமமானவர் என்று சொல்லவில்லை. அந்த எண்ணங்கள் நமக்கு வரவேகூடாது என்பதால்தான் அவர்களுடைய கோவிலுக்குச் செல்லக்கூடாது சேவிக்ககூடாது என்று சொன்னதற்கு ப்ரதான காரணம்.
சிலர் அவர்களைச் சேவித்துச் சேவித்து, பெருமாளைச் சேவித்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை அவர்களைச் சேவித்தால் தான் பலன் கிடைக்கிறது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செய்வதெல்லாம் ஸம்ஸார பாபத்தில் போய் முடியும். அதனால் தான் அதை நாம் நினைக்கவேகூடாது. பெருமாள் தான் உயர்ந்தவர் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்பதாலும், அவரை மட்டும் சேவிப்பது மற்றவர்களை அவருக்குச் சமமாக கூட நினைக்கக்கூடாது , அவர்களிடம் சமமாக நடந்துகொள்ளக்கூடாது என்பதால் தான் இதர தேவதாந்திரங்களைச் சேவிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top