துளசி , விஷ்ணுவுக்கு சாபம் அளித்ததால் சாளக்கிராமமாக அவர் ஆனதாகவும், ஜலந்திரன் எனும் அசுரன் மனைவியாக துளசி இருந்தாகவும் கூறப்படும் விஷயங்கள், புராணத்தில் உள்ளதா? இதில் விஷ்ணுவின் பெருமைக்குக் குறை போல் இருக்கின்றது தெளிவிக்க வேண்டுகிறேன்.

புராணத்தில் பலவித புராணங்கள் உண்டு. அந்தப் புராணங்களில் இருக்கும் கதைகள் எல்லாம் அப்படியே முழுவதும் சத்தியமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. சில வேறுவிதமாக இருந்தாலும், பெருமாளுடைய ஒரு அபிநயம் என்பதாகவும் உண்டு. கிருஷ்ணாவதாரத்தில், சிவனுடைய அனுக்ரஹத்தால் தான் கிருஷ்ணனுக்குக் குழந்தை பிறந்தது என்று இருக்கின்றது. இவையெல்லாம் பெருமாளுடைய அபிநயம் என்று பூர்வாசார்யர்கள் வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள். அதேபோல் பெருமாள் சிவனுக்குப் பயந்து யக்ஞத்திலிருந்து ஓடினார் என்று இருக்கின்றது. அதுவும் ஒரு அபிநயமே. பெருமாள் அவதாரம் பண்ணும் பொழுது தன் பெருமைகளைச் சுருக்கிக்கொண்டு சில அபிநயங்கள் செய்வதுண்டு. அந்த ரீதியில் பெருமாளுடைய பெருமைக்குக் குறைவு இல்லாமல் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top