என் பேரனுக்கு 9 வயது முடிந்து 10-ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. உபநயனத்திற்கான சரியான வயதை அறிய விரும்புகிறேன். குறிப்பாக உபநயனம் எந்த வயதில் பண்ண வேண்டும்? ஒற்றைப்படை வயதிலா அல்லது இரட்டைப்படை வயதிலா? எந்த வயதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? முடிந்த வயதையா அல்லது நடந்துகொண்டிருக்கும் வயதையா? ஒற்றைப்படை வயதில் உபநயனம் செய்யக் கூடாது, இரட்டைப்படை வயதில் தான் செய்ய வேண்டும் என்கிறார்களே அது சரியா தவறா. தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

“உபநயனம் ப்ராம்ணஸ்ய அஷ்டமே” என்று சொல்லப்பட்டிருக்கிறது, எட்டாவது வயதில். அதில் கர்பாஷ்டமம் என்று கணக்கெடுத்து ஏழாவது வயதில் செய்வதும் உண்டு.
ஆனால் ஒற்றைப்படை வயதில் செய்யக்கூடாது என்பது இல்லை. பதினாறு வயதிற்குள் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதற்கு பிறகு காயத்ரி பலனை கொடுக்காது. 7 வயது முதல் 16 வயதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் உபநயனம் செய்யலாம். ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை வயதுகளில் குறிப்பிட்டுச் செய்வதற்கான ப்ரமாணங்கள் என்னவென்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top