a.ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள் என்னென்ன? b. தீபாவளி அமாவாஸை அன்று சிலர் க்ருஹங்களில் லட்சுமி பூஜை செய்கிறனர். ஆனால் அன்றைய தினத்தன்று பெரியவர்கள் தர்ப்பணம் செய்வதனால் பண்டிகை கொண்டாடுவதில்லை. c.நம் பெரியவர்கள் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடினர் என்று பட்டியலிட்டு அதை பற்றிச் சிறிது விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள்:
சித்திரை மாதத்தில் விஷு
தக்ஷிணாயன புண்ணிய காலம்
உபாகர்மா
திருவாடிப்பூரம்
சில க்ருஹங்களில் ஆடி18
ஸ்ரீ ஜெயந்தி
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி அதிலும் முக்கியமாக மகா நவமி விஜயதசமி
துலா விஷு
தீபாவளி
சங்கராந்தி
சில க்ருஹங்களில் ஆடி மற்றும் தை அமாவாஸை
சிலர் மட்டும் செய்யும் காரடையான் நோன்பு
ஸ்ரீராம நவமி
ந்ருஸிம்ஹ ஜெயந்தி
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடைய திருநக்ஷத்ர தினங்கள்
b. இவையெல்லாம் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இதில் சில தினங்களில் விரதங்களும் உண்டு. ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீ ராமநவமி, ந்ருஸிம்ஹ ஜெயந்தி இந்தத் தினங்களில் வ்ரதமும் பாரணையும் உண்டு.
தீபாவளியை உத்தேசித்து பண்டிகையும் அமாவாஸையை உத்தேசித்து தர்ப்பணமும் இரண்டும் செய்யும் வழக்கம் உண்டு. லக்ஷ்மீபூஜை என்பது சில க்ருஹங்களில் மாத்திரம் செய்வது வழக்கம்.
c. எல்லா பண்டிகைகளிலும் பெருமாளை ப்ரார்த்திப்பதே வழக்கம். பண்டிகைகள் அன்று பண்டிகைத் தளிகைகளைச் செய்வது, கோவில்களுக்குச் சென்று பெருமாளைச் சேவிப்பது, அந்தப் பண்டிகைக்குள்ள விசேஷமான காரியங்களைச் செய்வது, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திருநக்ஷத்ரத்தன்று அந்தந்த ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைச் சேவிப்பது, என்பதே வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top