நமக்கு திருவாராதனம் செய்ய அவகாசம் இருக்கும் பக்ஷத்தில் அபிகமனத்தை மானசீகமாக செய்து, தளிகைகளை கண்டருளப்பண்ணி குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு,மாத்யானிக காலத்தில் மாத்யானிஹம் செய்தபிறகு முடிந்தால் வேறு ஒரு ப்ரசாதம் பண்ணியோ அல்லது பாலோ, பழமோ கண்டருளப்பண்ணி திருவாராதனம் செய்யலாம்.