மாத்யானிஹம் பண்ணிய பிறகுதான் ஆத்துப்பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்படடிருக்கின்றது. ஆனால் குழந்தைகள் வேலைக்குப் போவதற்கு முன் சாப்பிட்டுவிட்டு கையிலும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். இது காலை 8.00 மணிக்கு முன் தயாராக வேண்டும். திருவாராதனம் பண்ணித்தளிகை இதற்கு முன் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தச்சூழலில் காலை 7.30 மணிக்கு முன் மாத்யானிஹம் பண்ணித் திருவாராதனம் முடித்து தளிகை பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இது சரியா அல்லது திருவாராதனம் பண்ணிவிட்ட பிறகு அதற்கு உரிய சமயத்தில் மாத்யானிஹம் பண்ணலாமா? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

நமக்கு திருவாராதனம் செய்ய அவகாசம் இருக்கும் பக்ஷத்தில் அபிகமனத்தை மானசீகமாக செய்து, தளிகைகளை கண்டருளப்பண்ணி குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு,மாத்யானிக காலத்தில் மாத்யானிஹம் செய்தபிறகு முடிந்தால் வேறு ஒரு ப்ரசாதம் பண்ணியோ அல்லது பாலோ, பழமோ கண்டருளப்பண்ணி திருவாராதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top