ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது?

ப்ரளயகாலத்தில் எல்லாமே அழிந்து போயிருந்தாலும்கூட, பகவான் தான் சயனிப்பதற்காக புதிதாக ஜலத்தையும், மரத்தையும் ஸ்ருஷ்டித்து அதில் இருக்க முடியும் என்கின்ற சமாதானத்தை ஸ்வாமி தேஶிகன் சாதித்திருக்கிறார்.
சிலர் சொல்லுகிறார்கள், ஆலிலைக்கண்ணன் என்பது மொத்த ப்ரளயம் ஆகும்சமயம் நடந்தது இல்லை. இது ஒரு அவாந்த்ர ப்ரளயம். அதாவது உள்ளுக்குள் ஒரு சின்ன ப்ரளயம் இது. அப்போது லோகமெல்லாம் அழிந்து விட்டது. அப்போது சிலர் மட்டும் இருக்கின்றனர். உதாஹரணத்திற்கு மார்க்கண்டேயர் போல் சிலர் இருக்கின்றனர். அப்போது அவர் சேவித்தார் என்று இருக்கின்றது. மகா ப்ரளயம் என்பது மொத்தமும் அழிந்து போகும் சமயம், அப்போது நடந்தது இல்லை இது என்பதாகச் சொல்வதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top