முக்தி அடையும் ஜீவர்களே நித்யவிபூதியைச் செல்லும் போது அவர்கள் இச்சையை அனுசரித்து பல விதமான திருமேனியைப் பெறமுடியும் என்றிருக்கும் போது, நித்யர்களுக்குச் அது சாத்யமே. அதனால் ஆதிசேஷன் ஒரே சமயத்தில் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களைச் செய்ய முடியும், பல இடங்களில் இருக்க முடியும்.
க்ஷீராப்தி என்பது, ஸ்ரீ வைகுண்டத்திற்கு வெளியே இருப்பது, தேவாதிகள், ப்ரம்ம ருத்ராதிகள் சென்று சேவிக்கக்கூடிய இடம். இதுவும் பகவத் ஸங்கல்பத்தினாலே உருவாக்கப்பட்ட இடம், சதுர்முக ப்ரம்மாவால் உருவாக்கப்பட்டது அல்ல.