ஜீவர்கள் மோக்ஷம் அடையும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவதாகக் கூறப்படுகிறது, மேலும் அது ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய லோகத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது, அதுவும் நித்யலோகமா? அது எதனால் ஆனது? ஆதிசேஷன் நித்ய சூரியாக இருந்தாலும், பெருமாளை போல் விபுவாக இருக்க முடியாது, அப்படியிருக்க, இரண்டு இடங்களிலும் பெருமாளுக்கு படுக்கையாகவும், இருக்கையாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

முக்தி அடையும் ஜீவர்களே நித்யவிபூதியைச் செல்லும் போது அவர்கள் இச்சையை அனுசரித்து பல விதமான திருமேனியைப் பெறமுடியும் என்றிருக்கும் போது, நித்யர்களுக்குச் அது சாத்யமே. அதனால் ஆதிசேஷன் ஒரே சமயத்தில் பெருமாளுக்கு பல கைங்கர்யங்களைச் செய்ய முடியும், பல இடங்களில் இருக்க முடியும்.
க்ஷீராப்தி என்பது, ஸ்ரீ வைகுண்டத்திற்கு வெளியே இருப்பது, தேவாதிகள், ப்ரம்ம ருத்ராதிகள் சென்று சேவிக்கக்கூடிய இடம். இதுவும் பகவத் ஸங்கல்பத்தினாலே உருவாக்கப்பட்ட இடம், சதுர்முக ப்ரம்மாவால் உருவாக்கப்பட்டது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top