திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை அலங்கரித்து வழிபட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. துளசி மாடம் இருக்கின்றது என்றால் அதில் சாதாரணமாக ஒரு பொந்துப்போலே மாடம் இருக்கும். அதில் ஒரு மரியாதைக்காக விளக்கேற்றி வைக்கலாம். ஆனால் விதிமுறை என்று ஒன்றும் கிடையாது. மனதிற்குள் மஹாலக்ஷ்மியை த்யானித்துக்கொண்டு லக்ஷ்மி ஸ்லோகங்களைச் சொல்லலாம்.

