ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தை சேவிக்கலாமா? க்ருஹத்தில் பாராயணம் பண்ணலாமா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தையாக சொல்வதோ பாராயணம் செய்வதோ ப்ராசீன வழக்கத்தில் இல்லை. சுந்தரகாண்டம் கதைகளைச் சேவிக்கவோ, அர்த்தங்களை நன்கு அறியவோ எந்தவித பாதகமும் இல்லை.
ஆனா ஸ்ரீமத் இராமாயணத்தை பாராயணம் பண்ண ஒரு விதிமுறை இருக்கிறது, அதாவது அந்த ஸ்ரீ கோசத்தில் எம்பெருமானை ஏளப்பண்ணி, ஆவாஹநம் பண்ணி, அம்சை பண்ணி, சிக்கு பலகையில் வைத்து மரியாதையாக சேவிப்பது எனும் வழக்கம் உண்டு. இப்படிப்பட்ட பாராயணம் ப்ராசீன காலத்தில் ஸ்த்ரீகளுக்காக ஏற்பட்ட வழியல்ல. இக்காலத்தில் மாற்றம் இருக்கிறது ஆனால் வழிவழியாக வந்த நடைமுறையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top