அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் ஜபம் செய்யக்கூடிய முறையை ஆஹ்நீக க்ரந்தங்களில் சேவிக்கலாம்.
அஷ்டாக்ஷர ஜபத்தில் நின்று ஜபிப்பது, அமர்ந்துகொண்டு ஜபிப்பது போன்ற ஸம்ப்ரதாய பேதங்கள் உள்ளன.
த்வயம் ஶரம ஶ்லோகம் பொறுத்தவரை உட்கார்ந்துக் கொண்டுதான் ஜபிக்க வேண்டும், நின்று கொண்டு பண்ணமுடியாது என்று நினைக்கின்றேன்.
திருவஷ்டாக்ஷர ஜபத்தை அந்தந்த ஸம்ப்ரதாயத்தை அனுசரித்துச் செய்யவும்.
ஸ்த்ரீகளைப் பொறுத்தவரை அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் இவையெல்லாம் சாதாரனமாக அமர்ந்துகொண்டு ஜபிப்பது தான் வழக்கம். ஆசார்யன் கற்றுக்கொடுத்த த்யான ஶ்லோகத்தை முதலில் சேவித்துவிட்டு, அதன் பிறகு கண்ணைமூடி வஸ்த்ரத்தினுள் கைவைத்து எண்ணிகை எப்படிச் செய்யவது என்ற முறையையும் ஆசார்யன் கற்றுக்கொடுத்திருப்பார்,அந்த முறைப்படி திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஶ்லோகத்தை குறைந்தபக்ஷம் ஒவ்வொன்றையும் பத்துதடவையாவது அமர்ந்துகொண்டு ஜபிக்க வேண்டும்.