பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பாஞ்சராத்ரம், வைகானஸம் இரண்டும் பெருமாளின் திருவாராதனத்திற்காக வந்த இரண்டு ஆகமங்கள். வைகானஸ ஆகமம் என்பது விகனஸ மஹரிஷி எழுதியது. பாஞ்சராத்ரம் என்பது பெருமாளே ப்ரவர்த்தணம் பண்ணியது. இரண்டுமே சரியானது தான். இரண்டையுமே பெரியவர்கள் ஏற்றுக்கொண் டது தான்.
வைகானஸத்தில், வேத மந்திரங்கள் நிறைந்தும், பாஞ்சராத்ரத்தில் தாந்த்ரீக மந்திரங்கள் நிறைந்தும் இருக்கும்.
வைகானஸ ஆகமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டுமே திருவாராதனம் செய்ய முடியும், மற்றவர்களுக்கு தீக்ஷை கொடுத்து என்பது இதில் செய்ய முடியாது. பாஞ்சராத்ர ஆகமத்தில் தீக்ஷை பெற்றுக்கொண்டவர்கள் பண்ணலாம். இது தான் ப்ரதான வித்யாசம்.
மற்றப்படி மந்திரங்கள் வேறுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top