உலகத்தை சிருஷ்டித்து, ரக்ஷித்து மாதா பிதாக்களாக இருப்பது பெருமாளும், தாயாரும். சாதாரண மாதா பிதாக்கள் போல் அல்ல, அதில் அவர்கள் சில வ்யவஸ்தைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. உதாஹரணமாக, கர்மாதீனமாக தான் அவரவர்களுக்குப் பிறப்பும், சுகதுக்கங்களைக் கொடுப்பது என்று. ஒரே மாதா பிதாவாக ஆயினும் எல்லாரையும் ஒரே மாதிரி சுகமாகவே பிறக்க வைப்பதில்லை. ஒவ்வொருவரின் பிறப்பில், போகத்தில் எத்தனையோ வித்யாசங்கள் இருக்கின்றன. சிலர் பணக்காரனாக, ஏழையாக, ஆரோக்யமாக, புத்திசாலியாக பிறப்பதென அவரவர் கர்மாவிற்குயேற்றார் போல் பிறப்பு கொடுப்பது என்று ஒரு வ்யவஸ்த்தை வைத்துள்ளார்கள்.
அதே போல் தான் ரக்ஷணத்திலும் ஒரு வ்யவஸ்த்தை உண்டு, அவரவர் கர்மாவிற்கேற்றார் போல் ரக்ஷணம். ஶரணாகதி முதலான ரிதீயில் ப்ரார்தித்தால் ரக்ஷணம் அது இல்லாவிட்டால் ரக்ஷணம் இல்லையென்று “அப்ரார்தித்தோ ந கோபாயேத்” என சொல்கிறார்கள்.
இந்த வ்யவஸ்த்தை இல்லாவிட்டால் ஒரு ஜந்துவிற்கும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று ஆகிவிடும். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, அவரவர் கர்மாதீனமாக என்னவெல்லாம் உண்டோ அவையெல்லம் வரத்தான் வரும். அந்தக் கர்மத்தை மீறி பிழைத்துக்கொள்வதற்கு, செயல்படுவதற்கு சில ஶாஸ்த்ரங்கள் உண்டு. நம் அது மூலமாக தெரிந்துக்கொண்டு, கெட்டகார்யங்களைத் த்வரித்து, நல்ல கார்யங்களைச் செய்வது போன்றவை பண்ணலாம், ஶரணாகதி பண்ணலாம்.இவை செய்வதால் பகவான் ரக்ஷிகின்றான். அதை வைத்துக்கொண்டே அவன் ரக்ஷிப்பதினால் அவனை கருணாவான் என்கிறோம்.
இவையெல்லாம் சிருஷ்டி, ரக்ஷணம், மோக்ஷம் போன்றவற்றில் பகவான் செய்துகொண்ட வ்யவஸ்த்தை. இதை ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, மேலும் விஸ்தாரமாக அறிய தத்வமுக்தாகலாபம் முதலிய கர்ந்தங்களில் ஸேவிக்கலாம்.