நாவலப்பாக்கம் ஸ்ரீ உ வே வாஸுதேவ தாத்தாசார்யர் ஸ்வாமிகள் எழுதிய “வைணவக் கொள்கையில் வேதாந்த தேசிகன்” (Vedanta Desikan on the Principles of Vaishnavism- ஆங்கில மொழிபெயர்ப்பின் பக்கம் 232) என்கின்ற நூலில், அத்வைத தத்துவஞானி வித்யாரண்யர் சததூஷணியை விமர்சித்தபோது, ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருத “ச” என்ற ஒற்றை எழுத்தை வைத்துக் கொண்டு “ச கார ஸமர்த்தணத்தில்” எதிர் விமர்சித்திருக்கிறார். ”வித்யாரண்யரை ஸ்வாமி தேஶிகன் “ச” என்ற ஒற்றை அக்ஷரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர் விமர்சித்திருகிறார்? மேலும் சக்கர சமர்த்தனம் இன்றும் இருக்கின்றதா? விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ச கார ஸமர்த்தணம் என்ற நூல் உண்டு இப்போது கிடைப்பதில்லை. ச என்றால் – அதுவும் (and என்ற ஆங்கில வார்த்தை போன்றது). ச என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.
உ.தா: இராமனும் போனான் என்றால், இராமனுடன் மற்றொருவரும் சென்றுள்ளார் என்ற அர்த்தம் கிடைக்கும். அப்படிச் ச என்று சேர்த்தால் வேறு ஒருவரும் சென்றுள்ளார் என்பது போன்ற அர்த்தம் கிடைக்கும். அவ்வர்த்தம் சரியா இல்லையா போன்ற சர்ச்சைகள் உண்டாகும். அவசியமில்லாமல் ச சொல்லக்கூடாது.
இப்படி ச காரத்தில் சர்ச்சை வரும்போது, ச என்பது சரியாக தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அந்தப் புத்தகத்தில் சாதித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top