பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் என்னால் ஆசார்யன் தனியன்களைச் சேவிக்க முடியவில்லை. இது ஆசார்யனுக்கு செய்யும் தவறாகுமா?

பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை எனும் போது முடியாத சமயத்தில் சேவிக்கவில்லை என்றால் அது தப்பாகாது, முடிந்தும் சேவிக்காது போனால் தான் தவறாகும்.
உதாஹரணமாக, தனியனை ஶரீரத்தினால் சேவித்து சேவிக்கமுடியாவிடில் வாயால் சொல்லலாம், மனசினால் நினைக்கலாம். மனசால் நினைக்கமுடியவில்லை என்று யாரும் சொல்ல முடியாது மனதிற்கு வலி என்பது கிடையாது.
மனசினாலோ,ஶரீரத்தினாலோ, வாக்கினாலோ எந்த முறையினால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யனும அது தான் முக்கியம்.
ஶரீரத்தினால் முடியாவிட்டால் கீழே விழுந்து சேவிக்கனும் என்று எந்த ஶாஸ்த்ரமும் சொல்லவில்லை.ஆனால் முடிந்த சமயத்திலும் செய்யாமல் போனால் அது ஒரு குறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top