ஏகாதசி வ்ரதம் எப்பவுமே அநுஷ்டிக்க வேண்டிய ஒன்று. குழந்தைக்கு அன்னப்ராஶனம் ஆன பிறகு ஏகாதசியன்று அன்னத்தை கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பின்னப்படுத்தப்பட்ட அன்னத்தை கொடுக்கலாம். சிறு வயதிலிருந்தே சாதம் ஊட்டும் மாதக்கணக்கு குழந்தையாய் இருந்தால் கூட ஏகாதசி அன்று ஸொஜ்ஜி பண்ணிக்கொடுக்கலாம். அந்த வயதிலிருந்தே ஏகாதசி வ்ரதத்தின் அனுஷ்டானத்தை ஏற்படுத்தினோமேயானால் கூடிய சீக்கிரமே நிர்ஜலமாக வ்ரதம் இருக்கும் முறை வரை முன்னேற முடியும்.