அஷ்டாக்ஷர ஜபம் செய்வதற்கு முன் கட்டாயம் ஆசமனம் பண்ண வேண்டும். அஷ்டாக்ஷரம் த்வயம் ஶரம ஶ்லோகம் இவையெல்லாம் ஜபம் செய்வதற்கு முன் அதற்கென்று ஒரு த்யான ஶ்லோகம் இருக்கின்றது. அதை ஆசாரியன் உபதேசித்திருப்பார். அந்தந்த த்யான ஶ்லோகங்கள் சொல்லிவிட்டு ஜபம் பண்ணவது ஸ்த்ரீகளுக்கு வழக்கம். அதைத் தவிர சங்கல்பம் எதுவும் தனியாக பண்ணுவது வழக்கம் இல்லை.