நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் : திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி என அனைத்துப் பதிகங்களுக்கு தலைப்புள்ளது. இத்தலைப்பின் தாத்பர்யம் என்ன என்பதை சாதித்தருள வேண்டுகிறேன். எதைக்கொண்டு இத்தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டன?

நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்பது புத்தகம் அல்ல அது ஒரு தொகுப்பு.
24 ப்ரபந்தங்களைச் சேர்த்து, தொகுத்தது நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என ப்ரபந்த சாரத்தில் ஸ்வாமி தேசிகன் சாதித்திருக்கிறார். மேலும் நம் சம்ப்ரதாயத்தில் ஆசாரியர்கள் அப்படி ஏற்படுத்தியுள்ளனர்.
12 ஆழ்வார்கள் அருளிய ப்ரபந்தங்களை, 24 தலைப்புகள் கீழ், 24 ப்ர்பந்தங்களாக தொகுத்துள்ளனர். பெரியாழ்வார் அருளியதை பெரியாழ்வார் திருமொழி என்றும், ஆண்டாள் அருளியதை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்றும் வகுத்துள்ளனர்.
திருவாய்மொழி, திருவிருத்தம் என்பெதெல்லாம் அந்தந்த ப்ரபந்தத்தின் தலைப்புகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top