வேதங்களை உருவாக்கியிருக்கிறேன் என்று வேதமே சில இடங்களில் சொல்கிறது. அதற்கு ஏற்கனவே இருக்கின்ற வேதத்தை, இப்போது ப்ரகாசப்படுத்தியிருக்கிறேன் என்று அர்த்தமாகும்.
ஒரு தச்சன் தேர் செய்கிறார் என்றால், மரத்தை அவர் சிருஷ்டிப்பதில்லை, ஏற்கனவே இருக்கும் மரத்தை தேய்த்து நல்ல அமைப்பில் ஒரு வஸ்துவாக கொடுத்துள்ளார் என்று பொருள். அதே போல் தான் இங்கும், ஏற்கனவே இருக்கும் வேத்ததை நல்ல அமைப்பில் பெருமாள் நமக்கு கொடுத்துள்ளார் என்பது தான் பொருள்.
குறிப்புகள்:
அதாவது, வேதங்கள் போன கல்பத்தில் எப்படி உண்டாகி இருந்ததோ, அக்ஷரங்கள் எந்த க்ரமத்தில் உண்டாகியிருந்ததோ, அதே போலே அடுத்த கல்பத்தில் பகவான் அதை உபதேசிக்கின்றான்.
ப்ரளய காலத்தில், பகவான் மாத்திரமே இருக்க, மற்றவையல்லாம் அழிந்திருக்கும். பூர்வ கல்பத்தில் இருந்த வேதத்தை, பகவான் அதே க்ரமத்தில் மறுபடியும் உபதேசிக்கிறான். அதனால் தான் வேதம் அபௌருஷ்யம் எனப்படுகிறது.