சுமங்கலிகள் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமில்லை என்றாலும், ப்ராச்சின ரீதியில் இருக்கின்ற கைம்பெண்கள் சிறியளவில் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இப்போதும் சிலர் அதை அனுஷ்டிக்கிறார்கள்.
குறிப்புகள்:
ஸமாஶ்ரயணம் செய்விக்கும் அன்று, ஆசார்யர் 12 ஊர்த்வ புண்ட்ரங்கள் அதற்குரிய திருநாம உபதேசத்துடன், தரித்து விடுவார். அதற்குப் பின் நித்யமாக ஸ்த்ரீகள் நெற்றியிலும், பின் கழுத்திலும் இடுவது தான் வழக்கில் உள்ளது.