அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் ஆயிற்று. புருஷர்கள் போன்றே ஸ்த்ரீகளும் 12 திருமண் தரிக்க வேண்டுமா? அடியேன்.

சுமங்கலிகள் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமில்லை என்றாலும், ப்ராச்சின ரீதியில் இருக்கின்ற கைம்பெண்கள் சிறியளவில் த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இப்போதும் சிலர் அதை அனுஷ்டிக்கிறார்கள்.
குறிப்புகள்:
ஸமாஶ்ரயணம் செய்விக்கும் அன்று, ஆசார்யர் 12 ஊர்த்வ புண்ட்ரங்கள் அதற்குரிய திருநாம உபதேசத்துடன், தரித்து விடுவார். அதற்குப் பின் நித்யமாக ஸ்த்ரீகள் நெற்றியிலும், பின் கழுத்திலும் இடுவது தான் வழக்கில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top