அடியேன் நமஸ்காரம். எங்கள் ஆத்துப்பக்கத்திலே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கே அடியேன் எப்போதும் போவதுண்டு. ஆத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பண்ணுவோம். பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின் பிள்ளையார் கோயில் செல்லக்கூடாது என்கிறார்களே. அதை பற்றி விளக்கம் வேண்டும்.

பரந்யாஸம் ஆன பின் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லக்கூடாது.
பரந்யாஸம் ஆன பின்னர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய இரு விஷயங்கள்
இதர தேவதாந்தரங்களின் வழிபாடு
பாகவத அபச்சாரம்
முன்பு பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருந்தோம் இப்போது இல்லை தோஷமாகுமா என்ற வருத்தமோ, பயமோ வேண்டாம். எந்த தோஷமும் ஒட்டாது.
எம்பெருமான் தான் தேவாதிதேவன். அவன் நிச்சயம் காப்பாற்றுவான் என்ற மகாவிஶ்வாசத்துடன் பரந்யாஸம் செய்துக்கொண்டுள்ளோம். பரந்யாஸம் என்பது பதிவ்ரதா தர்மம் போலே எம்பெருமானைத் தவிர வேறு எந்த தேவதைகளையும் நிச்சயமாக சேவிக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top