புரட்டாசி மாதம், திருமலையில் ப்ரம்மோற்சவம் நடக்கும் சமயம் (த்வஜாவரோஹனம் வரை) மாவிளக்கு ஏற்றக்கூடாது என்கிறார்களே? விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை நாம் திருவேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றுகின்றபடியாலே, திருமலையில் நடக்கும் உற்சவத்தில் நாம் அந்வயிக்க வேண்டும் என்பதனால் உற்சவ சமயத்தில் மாவிளக்கு ஏற்ற வேண்டாம் என்பார்கள்.
குறிப்பாக திருமலையில் வசிப்பவர்கள் உற்சவசமயத்தில் பண்ணமாட்டார்கள். பொதுவாக கோவிலில் உற்சவம் நடக்கின்றது என்றால், அந்த நேரம் ஆத்துப்பெருமாள் திருவாராதனையைச் சுருக்கிக்கொள்வார்கள். உபநயனம், கல்யாணம் போன்ற கார்யங்கள்கூட உற்சவம் முடிந்தப்பின்தான் வைத்துக்கொள்வார்கள். ஏனென்றால் கோவில் உற்சவத்தில் அந்வயிப்பது தான் ப்ரதானம்.
இயன்ற அளவு திருமலை உற்சவத்தில் கலந்துக்கொள்ள முயற்சிக்கலாம். மேலும், அச்சமயம் மாவிளக்கு ஏற்றுவதனால் எந்த தோஷமும் இல்லை. ஆத்துப்பெரியவர்கள் வழக்கப்படி செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top