சகுனம் பார்த்தல் என்பது தொன்றுத்தொட்டே பெரியோர்களின் வழக்கத்தில் இருக்கிறது. உதாஹரணமாக நாம் வெளியே புறப்படும் சமயம் இரு ப்ராமணர்கள் வருகிறார்கள் என்றால் ,நல்ல சகுனம் என்பர். நம் கார்யம் நல்ல ரிதீயில் நடக்கும் என்று சொல்வார்கள்.
நிமித்தம் என்று ஒன்று உண்டு, ஒரு கார்யத்தை ஆரம்பிக்கப்போகிறேன் என்று பேசுகிற சமயம் மணியோசை கோட்டால், அக்கார்யம் நன்றாக நடக்கும் என்பர். அதே நேரம் வேறு யாரோ அமங்கலமான வார்த்தையைச் சொல்கிறார்கள் என்றால் அது நன்றாக நடைப்பெறாது என்பர்.
ஸ்வப்நம் என்று உண்டு, நாம் காணும் ஸ்வப்நத்திற்கு ஏற்றார் போலே பலன்களை எல்லாம் சாஸ்த்ரம் சொல்லியிருக்கு.
இப்படிச் சகுனங்கள் பற்றி ஸ்ரீமத் இராமாயணத்தில் நிரம்பி இருக்கு. மேலும் ஜோதிட சாஸ்த்ரத்திலும் இதைப்பற்றி இருக்கு. இதன் பின் இருக்கும் அறிவியல் விஞ்ஞானம் என்ன? விரிவாக அறிய கீழ் காணொளியைப் பார்க்கவும்.