அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போது ஜபிக்க வேண்டும்?

சந்தியாவந்தனம் ஆன கையோடு, அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிப்பது என்பது நம் பெரியோர்களின் வழக்கமாக இருக்கின்றது. இதை ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமரக்ஷையில், மஹாபாரத வசனத்தை ப்ரமாணமாக காட்டிய படியினாலே நம் பெரியோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இச்சமயத்தில் அவனை பூஜிக்க, ஆத்ம சுத்தி பெறுகிறார்கள் என்று அந்த வசனத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஸமாஶ்ரயணம் ஆனவர்கள் மட்டுமே இதை செய்ய முடியும். ஸமாஶ்ரயண பரம்பரையிலே ஆசார்யன், ப்ராசார்யன் அவரின் ஆசார்யன் அவர்களின் தனியன்களை அனுசந்தானம் செய்து, பின் “அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய பரமாசார்யன்” என்கின்ற ஸ்லோகத்தையும், “என் உயிர் தந்தளித்தவனே” என்ற ஸ்லோகத்தையும் அனுசந்தானம் பண்ணுவது வழக்கில் இருக்கிறது.
மேலும், ப்ராணாயாமம் எப்படிச் செய்து சங்கல்பம் பண்ணுவது என்பவற்றை விவரமாகவும், மஹாபாரத வசனம் என்ன என்பதையும் விரிவாக அறிய கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top