பரமபதத்திற்குச் சென்ற ஜீவனின் கதி மிகவும் உத்தமமான கதி. அவர் நம் தர்ப்பணத்தை எதிர்பார்ப்பதே இல்லை. அவர் ப்ரம்மாநுபவத்தைப் பெற்றுக்கொண்டு உத்தமமாக இருக்கிறார். இதை வேதமே “சாந்தோக்ய உபநிஷத்தில்” ஸ்பஷ்டமாக கூறுகிறது.
குறிப்புகள்:
நாம் அவர்களை உத்தேசித்து, தர்ம சாஸ்த்ரங்களிலும், வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கின்றபடியினால் தர்ப்பணாதிகள் செய்கின்றோம். நாம் செய்வதனால் அவர்கள் ஒரு த்ருப்தியும் அடையப்போவதில்லை. வேதம், தர்ம சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டதை நாம் செய்யாவிடில் நமக்கு பாபமாகும். ஆகையால், அவர்கள் கதியைப்பற்றிக் கவலைபடாது, நம் கதியைப்பற்றி நினைத்து, சாஸ்த்ரம் சொன்னபடி அவர்களுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவை உத்தேசித்து நாம் செய்தல் வேண்டும்.
சாஸ்த்ரம்தான் பரவ்ருத்தி நிவ்ருத்தி என இரண்டிற்கும் காரணமானபடியால் அது சொல்லும்படி செய்தால் போதும் அவர்களுக்கும் சரி பெருமாளுக்கும் சரி எந்தக் குறைவும் கிடையாது.
உதாஹரணமாக, நம் ஆத்துப்பெருமாளுக்கு நாம் திருவாராதனை செய்கின்றோம். செய்யாவிட்டால் பெருமாளின் கதி என்ன என்றால், அவருக்கு ஒரு குறைவும் ஏற்பட போவதில்லை.
நாம் திருவாராதனை செய்தால் நமக்கு நல்ல கதி கிட்டுமே தவிர, அவர் கதி என்ன என்ற கேள்வியே இல்லை, அவருக்கு ஒரு குறைவும் ஏற்படாது. அதே போல் தான் இந்தக் கேள்வியும் அதன் பதிலும்.