ஏகாதசிக்கும் அரிசிக்கும் உள்ள தொடர்பு யாது? ஏன் முழு அரிசியை கட்டாயம் தவிர்த்து வேண்டுமானால் பின்ன அரிசி எடுத்துக்கொள்ளலாம் என்றுள்ளது? அடியேன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அரிசி என்பது மனிதனுடைய பூர்ண ஆஹாரம். பால், பழம் போன்றவையெல்லாம் அரைகுறை ஆஹாரம்.
ஏகாதசி அன்று பூர்ண வ்ரதம் இருக்க வேண்டும். அது இயலாதவர்கள், இந்த பூர்ண ஆஹாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றபடியால் அரிசியைத் தவிர்க்க வேண்டும் என்றுள்ளது.
குறிப்புகள்:
புராணத்தில் ருக்மா என்ற சரித்திரத்தில் கூறியதாவது, ஏகாதசி அன்று மோகினி என்ற துர் தேவதா ஒருத்தி, பூர்ண அரிசியில் உட்காருகிறேன் என்றும் யாராவது அதை உட்கொள்ள அவர்களின் உள் சென்று விடுகிறேன் என்றும் அவள் கூறியதால், அவளை விரட்டும் ஒரு வழியாக அரிசியை உடைக்க, அவள் அதில் இருந்து ஓடி விடுகிறாள் என்பதாலும், அது அரைகுறை ஆஹாரமாகிறபடியாலும் பூர்ண அரிசியைத் தவிர்ப்பது என்ற வழக்கம் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top