அடியேன் பௌர்ணமி அன்று தர்ப்பணம் செய்யலாமா? பித்ரு பக்ஷமன்று தர்ப்பணம் முதலில் செய்ய வேண்டுமா? அல்லது திருவாராதனை முதலில் செய்ய வேண்டுமா?

பௌர்ணமி அன்று தர்ப்பணத்திற்கு ப்ரஸக்தி இல்லை.
பௌர்ணமி தினத்தில் க்ரஹணம், மாசப்பிறப்பு வந்தால் செய்ய வேண்டும். ஏனெனில் அது மாசப்பிறப்பை உத்தேசித்து செய்ய வேண்டிய தர்ப்பணம். பௌர்ணமியை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
குறிப்புகள்:
இதில் மாசப்பிறப்பு தர்ப்பணம், மாதம் பிறக்கும் புண்யகாலத்தை ஒட்டிச் செய்ய வேண்டும். காலையிலே மாதம் பிறக்கிறது என்றால், முதலில் தர்ப்பணம் செய்துவிட்டு பின் திருவாராதனை செய்ய வேண்டும். இஜ்யா காலச்சமயத்திற்குப் பின் மாசப்பிறப்பு தர்ப்பண காலம் வந்தால், முதலில் இஜ்யாராதனை செய்துவிட்டு பின்பு தர்ப்பணம் செய்வது தான் வழக்கம்.
தர்ஶ ஶ்ரார்த்தத்தில், அதற்குக் காலம் அபராஹ்ண காலமானபடியினால், மாத்யானிக ஸ்நானம் செய்து மாத்யானிக திருவாராதனை செய்த பிறகே, தர்ஶ ஶ்ரார்த்தை, அமாவாஸை தர்ப்பணத்தைச் செய்வதே பெரியோர்களின் வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top