ப்ரபத்தி செய்தவர்கள் என்று இல்லை யாராக இருந்தாலும், தன் பெயர் கோத்ரம், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதென்பது இரண்டாம்பட்சம் தான். “பகவத் ப்ரீத்யர்த்தம்” அதாவது பெருமாளுடைய ப்ரீதிக்காக என்று சொல்லி, பெருமாளின் பெயரில் அர்ச்சனை பண்ணுவதுதான் உத்தமமான கல்பம்.
குறிப்புகள்:
பெருமாளுக்கு ப்ரீத்தி ஏற்பட்டுவிடின், நாம் என்ன கேட்கின்றோமோ எல்லாவற்றையும் அவர் தானே கொடுப்பார். அதுமட்டுமல்ல, நாம் கேட்க வேண்டும் என்கின்ற அவசியமே இல்லை, அவரே பார்த்துப்பார்த்து நமக்கு வேண்டியவற்றைக் கொடுப்பார்.
அதையும் மீறி நமக்கு ஏதாவது கேட்க வேண்டும் எனத் தோன்றினால் அவருடைய ப்ரீத்தியை வேண்டினாலே நமக்கு வேண்டிய ஆரோக்கியம், சுகம், ஐஶ்வர்யம் என எதுவாக இருந்தாலும் தானே கிடைத்துவிடும்.