பெண்கள் தனது பெற்றோர்களின் ஶ்ராத்த தினத்தன்று காலையில் கோவிலுக்குப் போகக்கூடாது என்பது கிடையாது, ஆனால் மரியாதை நிமித்தமாக தவிர்ப்பது நல்லது.
மேலும், பெண்கள் தங்கள் பெற்றோர்களுடைய ஶ்ராத்தத்திற்குச் சென்று ஒத்தாசை (தளிகையிலோ அல்லது மற்ற சுத்து கார்யத்திலோ) பண்ண முடிந்தால் கண்டிப்பாக செய்தல் வேண்டும். அதுவே உசிதம். அப்படிச் செய்ய இயலாதவர்கள், இன்றைக்கு ஶ்ராத்தம் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
ஶ்ராத்த க்ரஹத்திற்குச் சென்று ஒத்தாசை செய்தால், அதுவே நிறைய கோவில்களுக்குச் சென்ற புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.