பரமபதத்தில் பசி, தாகம் போன்றவைகள் கிடையாது. மேலும், நாம் அவர்கள் பசியைத் தீர்க்க ப்ரசாதம் ஸமர்ப்பிக்கவில்லை, ஒரு உபசாரமாகதான் கண்டருளப்பண்ணுகிறோம்.
அவர்கள், நாம் ஸமர்ப்பிக்கும் ப்ரசாதத்தின் ஸுக்ஷ்மமான பாகத்தை மட்டும் ஸ்வீகரித்துக்கொண்ட பின், நமக்கு அதை நல்ல ப்ரசாதமாக, தெய்வானுக்ரஹத்துடன் கொடுக்கிறார்கள். அதன் பின்னர் இது விசேஷமான ப்ரசாதமாக ஆகிறது. இதையே ஆகமமும் கூறுகிறது.