ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன் தான். “ஸ்தோஷ்யாமி ந: குலத4னம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
திருமலை தாதாச்சார்யார் ஸ்வாமிகளுக்கெல்லாம் (அவர் பரம்பரைக்கெல்லாம்) திருமலை வெங்கடாஜலபதி தான் குலதெய்வம்.
இங்கே கேள்வி கேட்டிருப்பவர் கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் ஸ்வாமி பரம்பரை. அந்த ஸ்வாமிக்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தான் குலதெய்வம். அதன் படி, அவர்கள் தங்கள் குலதெய்வம் காஞ்சி வரதராஜப் பெருமாள் என வைத்துக்கொள்ளலாம்.