சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து சேலம் வந்தார்கள். எங்கள் ப்ரபிதாமஹ கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் அவர்கள். என்னுடைய பிதா மற்றும் பிதாமஹ இவர்களுக்கு குலதெய்வம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாததால் எங்கள் குலதெய்வம் யார் என்று தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோருக்கும் குலதெய்வம் என்பது பகவான் ஸ்ரீமன் நாராயணன் தான். “ஸ்தோஷ்யாமி ந: குலத4னம் குலதை3வதம் தத்” என்று ஆளவந்தார் சாதித்திருக்கிறார்.
திருமலை தாதாச்சார்யார் ஸ்வாமிகளுக்கெல்லாம் (அவர் பரம்பரைக்கெல்லாம்) திருமலை வெங்கடாஜலபதி தான் குலதெய்வம்.
இங்கே கேள்வி கேட்டிருப்பவர் கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் ஸ்வாமி பரம்பரை. அந்த ஸ்வாமிக்கு, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தான் குலதெய்வம். அதன் படி, அவர்கள் தங்கள் குலதெய்வம் காஞ்சி வரதராஜப் பெருமாள் என வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top