அபராஹ்னம் என்றால் என்ன. அபராஹ்னம் காலத்தில் தான் தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அடியேன் தர்ப்பணாதிகள் செய்ய மதியம் 1 மணிக்கு மேல் ஆகிறது. அது சரியான சமயமா என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ஒரு நாளின் பகல் பொழுதை 5 ஆக பிரித்துக்கொண்டு, அதில் வரும் 4வது காலம் அபராஹ்ன காலம் என்று பெயர். ஆங்கிலத்தில் Afternoon சொல்லும் காலம்.
பகல் பொழுதென்பது சராசரியாக 30 நழிகை வரும். அதை 5 ஆக பிரித்தால் ஒவ்வொரு காலமும் 6 நாழிகை என வரும், முதல் மூன்று 6 நாழிகை கழிந்த பின். அதாவது 18 நாழிகைக்குப் பின் 24 வரை இருக்கக்கூடிய நாழிகைகள் அபராஹ்னம் என்பதாகும், சுமார் மதியம் 1 மணிக்கு மேல் வரும். ஆகையால் மதியம் 1 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்வது சரியான சமயம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top