ஒரு நாளின் பகல் பொழுதை 5 ஆக பிரித்துக்கொண்டு, அதில் வரும் 4வது காலம் அபராஹ்ன காலம் என்று பெயர். ஆங்கிலத்தில் Afternoon சொல்லும் காலம்.
பகல் பொழுதென்பது சராசரியாக 30 நழிகை வரும். அதை 5 ஆக பிரித்தால் ஒவ்வொரு காலமும் 6 நாழிகை என வரும், முதல் மூன்று 6 நாழிகை கழிந்த பின். அதாவது 18 நாழிகைக்குப் பின் 24 வரை இருக்கக்கூடிய நாழிகைகள் அபராஹ்னம் என்பதாகும், சுமார் மதியம் 1 மணிக்கு மேல் வரும். ஆகையால் மதியம் 1 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்வது சரியான சமயம் தான்.

