குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம் என்பதன் தாத்பர்யமானது, தலையே ஸமர்பிக்கின்றோம் என்பது போலாகும். தலை சிரைத்து என்று தான் அதைக் குறிப்பிடுவார்கள். “காம்பறத் தலை சிரைத்து” என்று ஆழ்வாரும் குறிப்பிடுகின்றார்.
நம் தலையையே அதாவது குழந்தையையே பெருமாளுக்கு ஸமர்பிக்கின்றோம் என்பதற்கு அடையாளமாக முடியை ஸமர்பிக்கிறார்கள். முடி என்பது மீண்டும் வளரக்கூடியது என்பதால் அப்படிச் செய்வது பாதகமில்லை எனத் தெரிகிறது.