விநாயகர் என்பவர் ப்ரசித்தமாக இப்போது இருந்து வருகிறார். புரியாதவர்களுக்கு நாம் மெதுவாக இப்படி எடுத்துச் சொல்லலாம்.
விநாயகர் என்பவர் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வமே கிடையாது. யாகத்தின் தேவதைகள் என பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறார்கள், அதில் விநாயகர் குறிப்பிடப்படவில்லை. விநாயகர் என்பவர் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வைதீகமான தெய்வமில்லை.
விநாயகர் மட்டுமல்ல ஒருகாலத்தில் வைதீகமானவர்கள், ஸ்மார்த்தர்களுட்பட ஐயப்பன் முதலியவர்களைச் சேவிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் அல்ல.
வேதம் பல தேவதைகளைச் சொல்லி “விஷ்ணு பரம:” என்று விஷ்ணு தான் உயர்ந்த தெய்வம் என்றாகச் சொல்லியிருக்கிறது.ஆகையால் எம்பெருமான் விஷ்ணுவை சேவித்து விட்டால் மற்ற தேவதைகளைச் சேவிக்காவிட்டால் கூட அவர்கள் கோபிக்க மாட்டார்கள் ஏனென்றால் மற்ற தேவர்களுக்குத் தெரியும் விஷ்ணு தான் உயர்ந்தவர் என்று.
ஆக விநாயகருக்கும் திருப்த்தி வரவேண்டும் என்றால் விஷ்ணுவை சேவிக்க வேண்டும் என்பதே வேதத்தின் பரம தாத்பர்யம்.

