ஒருவர் தன்னுடைய தகப்பனார் திதியிலேயே மஹாளய ஶ்ராத்தம் பண்ணுகின்றார் என்றால் அதில் வேறு ஒன்றும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தாராளமாக பண்ணலாம்.
ஆனால் அப்பொழுது மகளுடைய நக்ஷத்ரம் வருகின்றதே என்று மனதில் உறுத்தலாக இருந்தால் அப்பொழுது வேறு ஒரு நாளில் பண்ணலாம். 15 நாளில் ஏதாவது ஒரு நாளில் பண்ணலாம் என்று இருக்கிறது.
மத்யாஷ்டமி முதலான நல்ல நாட்கள் எல்லாம் இருக்கும். அந்த நாட்களில் தாராளமாகப் பண்ணலாம். தகப்பனாருடைய திதியில் தான் பண்ண வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இல்லை. அதே சமயம் தகப்பனாருடைய திதியில் பண்ணும்போது இன்னொருவருடைய பிறந்தநாள் வந்தால் பார்க்க வேண்டியதில்லை. இது விசேஷம் என்று வைத்துக் கொண்டால் இது பண்ணலாம், இல்லை என மனதுக்கு உறுத்தலாக இருந்தால் வேறு ஒரு நாளிலும் பண்ணலாம்.