ஒருவருடைய தகப்பனார் ஜீவித்து இருக்கும்பொழுது அவர் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டிய அவசியமில்லை. தகப்பனார் இல்லாவர்கள் தான் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டும்.
பத்து நாள் தீட்டு சமயத்தில்
பெருமாள் கோவில்களுக்குச் சென்று கைங்கர்யம் செய்யக்கூடாது.
டோலோத்ஸவத்தில் ஆத்தில் பெருமாளை ஏள பண்ணக்கூடாது.
புரட்டாசி மாவிளக்கு, பெருமாள், ஆசார்யன் திருநக்ஷத்ரம் எதுவும் பண்ணக்கூடாது.
தீட்டு உள்ளவர் அகத்தில் ப்ரதானமவராக இருந்தால் அந்த ஆத்துக்கே தீட்டு என்கின்ற மாதிரி ஆகும். அதனால் பெருமாள் திருநக்ஷத்ரத்தை விடாமல் பண்ண வேண்டும் என்றால் தீட்டு இல்லாத வேறு ஒருத்தரைக் கொண்டு வேறு ஒரு இடத்தில் பண்ணி வைக்கலாம். புத்திரர்கள் இருந்தால் புத்திரர்கள் தனியாகப் பண்ணலாம். வைபவம் எதுவுமே பண்ணாமல் இருப்பதே நல்லது என்று சொல்வார்கள்.
வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு இந்த பண்டிகைகள் எதுவுமே 10 நாள் தீட்டுக்குள் வந்தால் அடிபட்டுப் போய்விடும். எதுவும் கொண்டாட முடியாது.