அடியேன் பர்த்தாவினுடைய குடும்பத்தில் தாயாதிகள் (மாமனாரின் 4 சகோதரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள்) உள்ளனர். மேலும் எங்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வசிக்கிறோம். சமீபத்தில் மாமனாரின் மூத்த சகோதரர் மற்றும் மூத்த சகோதரரின் மகன் பரமபதம் அடைந்தனர். நாங்கள் 10 நாட்கள் தாயாதிகள் தீட்டு அனுசரித்தோம். இருப்பினும் நம் தாயாதிகள் திருவடி அடையும் போது சில மரபுகளைக் கடைப்பிடிப்பதில் எனக்கு சில க்லேஷம் இருக்கின்றன. வித்வான்கள் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க ப்ரார்த்திக்கிறேன். அது எங்களுக்கும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கும் முறையான அனுஷ்டானத்தை பின்பற்றி வழிநடக்க உதவும். a) எங்கு இருந்தாலும் 10 ஆம் நாள் என் கணவர் குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா (என் மாமனார் உயிருடன் இருக்கிறார்)? b) பெருமாள் கோவில்களுக்கு சென்று கைங்கர்யம் செய்யலாமா? c) டோலோத்ஸவத்தில் பெருமாளை ஆத்தில் ஏள பண்ணலாமா? d) புரட்டாசி மாவிளக்கு மற்றும் பிற பெருமாள் மற்றும் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா? e) இதர பண்டிகைகள் – வருஷ பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு கொண்டாடலாமா? நீண்ட கேள்விக்கு க்ஷமிக்கணும் .தயவு செய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஒருவருடைய தகப்பனார் ஜீவித்து இருக்கும்பொழுது அவர் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டிய அவசியமில்லை. தகப்பனார் இல்லாவர்கள் தான் குழித்தர்ப்பணம் பண்ண வேண்டும்.
பத்து நாள் தீட்டு சமயத்தில்
பெருமாள் கோவில்களுக்குச் சென்று கைங்கர்யம் செய்யக்கூடாது.
டோலோத்ஸவத்தில் ஆத்தில் பெருமாளை ஏள பண்ணக்கூடாது.
புரட்டாசி மாவிளக்கு, பெருமாள், ஆசார்யன் திருநக்ஷத்ரம் எதுவும் பண்ணக்கூடாது.
தீட்டு உள்ளவர் அகத்தில் ப்ரதானமவராக இருந்தால் அந்த ஆத்துக்கே தீட்டு என்கின்ற மாதிரி ஆகும். அதனால் பெருமாள் திருநக்ஷத்ரத்தை விடாமல் பண்ண வேண்டும் என்றால் தீட்டு இல்லாத வேறு ஒருத்தரைக் கொண்டு வேறு ஒரு இடத்தில் பண்ணி வைக்கலாம். புத்திரர்கள் இருந்தால் புத்திரர்கள் தனியாகப் பண்ணலாம். வைபவம் எதுவுமே பண்ணாமல் இருப்பதே நல்லது என்று சொல்வார்கள்.
வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு இந்த பண்டிகைகள் எதுவுமே 10 நாள் தீட்டுக்குள் வந்தால் அடிபட்டுப் போய்விடும். எதுவும் கொண்டாட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top