பொதுவான சாஸ்த்ரம் என்னவென்றால் கார்த்திகை மாதத்தில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் அதற்கு முன் மாசம் பண்ண வேண்டும். பொதுவாக கார்த்திகை, மார்கழி, மாதங்களில் 29 நாட்களே இருக்கும். அதனால் ஸ்வாபாவிகமாக ஒரு திதி இல்லாமல் விட்டுப் போகும். கார்த்திகை மார்கழி தை இந்த மூன்று மாதங்களில் ஶ்ராத்த திதி இல்லை என்றால் பூர்வ மாதங்களில் அதாவது அதற்குமுன் மாதத்தில் ஶ்ராத்த பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரப்படி விதி இருக்கிறது.
அதனால் அதை முன்பே பார்த்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.